Monday, December 20, 2010

கடவுளும் குடிகாரரும்

ஒரு நாள் கடவுள் தண்ணி அடிக்கலாமுன்னு டாஸ்மாக் பாருக்குப் போனாரு. போயி ஒரு புல் பாட்டல் வாங்கி அடிச்சாரு. போதை ஏறலை. மறுபடியும் 2 புல் வாங்கி அடிச்சாரு.அப்பவும் போதை ஏறலை,இதைப் பாத்துக்கிட்டிருந்த குடிகாரரு, யோவ் என்னய்யா 3 புல் அடுச்சும் உனக்குப் போதையே ஏரலையான்னு கேட்டாரு. அதுக்கு கடவுள் எனக்கு எவ்வளவு குடிச்சாலும் போதை ஏறாது, ஏன்னா நான் கடவுள் அப்டின்னாரு. உடனே நம்ம குடிகாரரு, யோவ் உனக்கு இப்ப போதை புல்லா ஏறிருச்சு மெதுவா ஊட்டுக்குப் போயி படுதுக்க அப்டின்னாராம்.

4 comments:

  1. ஹா..ஹா... அய்யா. நடத்துங்க, நடத்துங்க...

    ReplyDelete
  2. அண்ணா, சூப்பர். நல்ல நகைச்சுவை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete